சிபிஎம் போராட்ட அறிவிப்பின் எதிரொலி: பயணிகள் நிழற்குடை: அதிகாரிகள் உறுதி
தஞ்சாவூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பு எதிரொலியாக ஒரு வார காலத்திற்குள் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் கருப்பூர் கடைவீதியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை கட்டி தரப்படாமல் இருந்தது. இதனால் முதியோர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், தற்போது மழைக்காலமாக இருப்பதால் ஒதுங்கி நிற்கக்கூடஇடம் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தி, கருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் கருப்பூர் கடைவீதியில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜி.சுதந்திரகுமார் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பழனி அய்யா, எம்.ராம், திருவையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.சுதந்திரகுமார், கிளைச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சியினருடன் திருவையாறு வட்டாட்சியர் இளமாருதி, டிஎஸ்பி பெரியண்ணன், ஊராட்சி செயலாளர் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், “ஒரு வார காலத்திற்குள் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கும். விரைவில் பணி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஜன.8 அகில இந்திய வேலை நிறுத்தம்: அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்
திருச்சிராப்பள்ளி, டிச.6- மத்திய அரசின் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து ஜனவரி 8ம் தேதி நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்த அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் வியாழனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திருச்சி மாநகர் பகுதிகளான ஏர்போர்ட், உறை யூர் குறத்தெரு, காட்டூர், சோமர சம்பேட்டை, மரக்கடை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒன்றிய தலைநகரங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது. டிச. 27ஆம் தேதி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் அருகிலும், புறநகரில் திருவெறும்பூரில் கடைவீதியி லும் வேலை நிறுத்தத்தை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் வரும் 11ம் தேதி வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடத்துவது. ஜனவரி 8ம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி திருச்சி தலைமை தபால் நிலை யம் முன் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப் பட்டது. கூட்டத்தில் சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், மணிமாறன், ராஜ், தொமுச மாவட்ட செயலாளர் சிவபெரு மாள், தலைவர் குணா, ஐஎன்டி யுசி மாவட்ட தலைவர் துரைராஜ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மணி, சுரேஷ், எச்எம்எஸ் ராஜ மாணிக்கம், ஏஐசிசிடியு மகேந்தி ரன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
பயணிகள், மாணவர்கள் நிழற்குடை வசதியின்றி தவிப்பு
தஞ்சாவூர் டிச.6- கொன்றைக்காடு கிராமத்தில் சாலை மற்றும் நிழற்குடை வசதி செய்து தர வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் காலகம் ஊராட்சி கொன்றைக்காடு கடை வீதியில் நிழற்குடை இருந்தது. இது பழுதடைந்த நிலையில், கடந்த 1 வருடத்திற்கு முன் இடிக்கப் பட்டது. புதிய நிழற்குடை இதுவரை அமைக்கப் பட வில்லை. இதனால் பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தவித்து வரு கின்றனர். புதிய நிழற்குடை அமைப்பதற்காக கொண்டு வந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல்களும் உடைந்து வீணாகி வருகிறது. மேலும், ரயில்வே கேட் இருபுறமும் அமைக்கப் பட்டுள்ள தார்ச்சாலை பழுதடைந்த நிலையில் பெரும் பள்ளமாக மாறி விட்டது. இதனால் வாகன விபத்தும் ஏற்படுகிறது. இதேபோல் கொன்றைக் காடு- ஆனைக்காடு சாலையில் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், ஆசாரித் தெருவிலும் உள்ள சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. புதிய நிழற்குடை அமைத்து தரவேண்டும். சாலை களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கொன்றை வெ.ரெங்க சாமி கூறுகையில், “ஓராண்டாகியும் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வரு கின்றனர். கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. பழு தடைந்த நிலையில் குண்டுங்குழியுமாக உள்ளது. கப்பிச் சாலையாக உள்ள இந்த சாலை தற்போது ஒத்தையடிப் பாதையாக மாறி விட்டது. அதேபோல் கடைவீதியில் உள்ள சாலையும் படு மோசமாக மாறி விட்டது. இவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு சரி செய்து தர வேண்டும்” என்றார்.
கால்நடை மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி ,டிச.6- திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகராட்சி ஜி கார்னர் மற்றும் காந்தி சந்தை ஆகிய பகுதிகளிலுள்ள ஆடு மற்றும் மாடு வதைக் கூடங்க ளில் ஆடு மற்றும் மாடுகளின் உடல் நலனை பரிசோதனை செய்யும் பணிக்கு, கால்நடை மருத்துவராக பணி செய்ய விருப்பமுள்ள கால்நடை மருத்துவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பங்களை ஆணையர், திருச்சி மாநகராட்சி என்ற முகவரிக்கு டிச.18 மாலை 5 மணிக்குள் பதிவஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அவர் தெரி வித்துள்ளார்.