tamilnadu

தஞ்சாவூர் ,கும்பகோணம் மற்றும் பெரம்பலூர் முக்கிய செய்திகள்

குற்றச்செயல்கள் அதிகரித்ததால் பூஜை நடத்திய காவல்துறையினர்

சீர்காழி, ஜூன் 18- நாகை மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த எஸ்.எஸ்.ஐ.சேகர் என்பவர் சாராய மாமூல் கேட்டு மிரட்டிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வைர லாக பரவியதையொட்டி எஸ்.எஸ்.ஐ சேகர் பணியிட நீக்கம் செய்யப்படார். மேலும் கொள்ளிடம் அருகே பரவங்காடு கிரா மத்தைச் சேர்ந்த ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப் பட்டார். தொடர்ந்து கொள்ளிடம் கே.ஏ.பி நகரில் ஒரு வீட்டில், கொள்ளிடம் கடைவீதியில் இரண்டு கடைகளில் கொள்ளை என கடந்த 20 நாட்களில் பல குற்றச்செயல்கள் நடந்ததால் உயர் அதிகாரிகள் கொள்ளிடம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர். பங்குனி உத்திரத்தன்று கொள்ளிடம் அம்மன் கோயிலில் காவல்துறை சார்பில் 10 நாள் மண்டகப்படி உற்சவம் நடை பெறும். அதனைதொடர்ந்து அங்குள்ள மதுரைவீரன் கோயி லில் இடும்பன் பூஜை நடத்துவர். அந்த பூஜையை தேர்தல் வந்ததால் காவலர்கள் செய்யவில்லை. இந்த பூஜை வழி பாடு செய்யாதது தான் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறக் காரணம் என்று நினைத்த கொள்ளிடம் காவல்துறையினர் அனைவரும் ஒன்று கூடி 2 ஆட்டுக்கிடாய்களை வெட்டி இடும்பன் பூஜை நடத்தினர்.

மீன்வளம் குறையும் அபாயம்  

அதிக திறன் கொண்ட விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

தஞ்சாவூர், ஜூன் 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிபட்டி னத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராம நாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.  தஞ்சை மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் புதுக்கோட்டை முருகானந்தம், ராம நாதபுரம் முனியசாமி, திருவாரூர் ராஜேந்திரன், நாகை ஆறு காட்டுதுறை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்யும் அதிக திறன் கொண்ட இஞ்சின்களை பயன்படுத்தி 4 விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனால் மீன்வளம் குறைந்து நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து வரு கிறது. இதனால் அனுமதியின்றி கடலுக்கு சென்ற 4 விசைப் படகுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 29 ஆம் தேதி சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் 5 மாவட்ட நாட்டுப்படகு மீன வர்களும் இணைந்து சாலை மறியல் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

பயணியை திட்டிய ஓட்டுநர் நடத்துநரின் உரிமம் ரத்து

கும்பகோணம், ஜூன் 18-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து கடந்த 15ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு தனி யார் பேருந்து திருச்சிக்கு புறப்பட்டது. அப்போது ஒரு பயணி பண்டாரவடை செல்வதற்காக ஏறினார். ஆனால் அந்த ஓட்டுநர் நடத்துநர் இரண்டு பேரும் பயணியை இடையில் எங்கும் நிற்காது, உடனே இறங்க வேண்டும் என்று தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தை செல்போன் மூலம் அந்த பயணி பதிவு செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து கும்ப கோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் திருச்சியை சேர்ந்த அந்த தனியார் பேருந்து உரிமையாளர் மற்றும் கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த டிரைவர் கோகுல் பிரசாத், கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த நடத்துநர் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் அழைத்து விசார ணை நடத்தினார். இதில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் 2 பேரும் பயணியை திட்டியது உண்மை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகிய 2 பேரின் உரிமத்தை ஆறு மாதத்திற்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

பெரம்பலூரில் கல் குவாரிகளை ஏலம் விடக் கோரிக்கை 

பெரம்பலூர், ஜூன் 18- பெரம்பலூர் ஆட்சியரக அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனியார் கிரஷர், கல் குவாரி உரிமையாளர் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனு வில், மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் ஏலம் விடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  அதோடு மட்டுமின்றி பெரும்பாலான கட்டுமானப் பணி களும் தடைபட்டுள்ளன. எனவே கல் குவாரிகளை ஏலம் விட்டு கட்டுமானத் தொழில் நலிவடையாமலும், குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.