tamilnadu

விளையாட்டுத் துறை சார்பில் கோடைகால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, ஏப்.29-புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:-புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கோடைகால இலவச பயிற்சி முகாம் விளையாட்டுத்துறையின் சார்பில் 02.05.2019 முதல் 22.05.2019 முடிய (சனி, ஞாயிறு உட்பட) புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ, மாணவி யர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, வளைகோல்பந்து ஆகிய விளையாட்டுகளும், மாணவர்களுக்கு மட்டும் கால்பந்து விளையாட்டும் நடத்தப்படவுள்ளது. மேலும் பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு பயிற்சி, சிற்றுண்டி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விருப்பமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது பெயரினை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் பதிவு செய்து கொள்வதுடன், 02.05.2019 அன்று காலை 6.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

;