தஞ்சாவூர்: மாணவரை அழைத்து செருப்பைக் கழற்றி விடச் சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.