திருவாரூர், மே 15- உலக தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற 8 மணி நேர வேலை யை 12 மணி நேர வேலையைாக உயர்த்துவதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) சார்பில் போ ராட்டம் மாவட்டம் முழுவதும் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.மாலதி குன்னியூரிலும், மாவட்ட செயலாளர் டி.முருகையன் முசிறி யத்திலும், மாவட்ட பொருளாளர் எம். பி.கே.பாண்டியன் திருத்துறைப் பூண்டியிலும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சங்கத்தின் முன்னணித் தலை வர்கள் மற்றும் இணைப்புச் சங்கங்க ளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீடுக ளுக்கு முன்பாக நின்று முழக்கங்கள் எழுப்பினர். 200-க்கும் மேற்பட்ட இடங்க ளில் போராட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வியா ழக்கிழமை அங்கன்வாடி ஊழியர் சங்கம், கூட்டுறவு ஊழியர் சங்கம், மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆகிய இணைப்பு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரு வாரூர் மின்வாரிய அலுவலகம் முன்பாக கே.ராஜேந்திரன், குன்னி யூரில் ஆர்.மாலதி, மன்னார்குடி கே. சகாயராஜ் ஆகியோர் தலைமை யேற்றனர். பேரளத்தில் வி.தவ மணி. வலங்கைமானில் ஏ.பிரேமா, நீடாமங்கலத்தில் ஆர்.மாலதி, செல்வி (அங்கன்வாடி), கோட்டூரில் வி.முருகா னந்தம், எஸ்.சித்ரா, குளிக்கரையில் எஸ்.செல்வம், வலங்கைமானின் என்.செல்வம் (கூட்டுறவு) உள்ளிட்டோர் தலைமையேற்றனர்.