tamilnadu

img

கழிவுநீர் குழாய் கசிவை சரி செய்யக் கோரி போராட்டம்

திருச்சிராப்பள்ளி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதிகளில் சேகரிக்கப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்கள் மூலம் பஞ்சப்பூர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கழிவு நீர் செல்லும் பிரதான குழாய்கள் காவிரி ஆற்றின் பழைய பாலத்தின் மேல்  கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் இணைப்புகளில் அடிக்கடி கசிவு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது.  அப்படி வெளியேறும் கழிவுநீர் கீழே ஓடும் காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த 5 மாதமாக இந்நிலை தொடர்கிறது. மேலும் காவிரி பாலத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்குகிறது. இந்த கழிவுநீர் குழாயின் கசிவு குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனை கண்டித்தும், பழுதடைந்த கழிவுநீர்க் குழாயை சீரமைக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் வெள்ளியன்று அந்த குழாய்க்கு மாலை அணிவித்து படையலிட்டு இறுதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், பகுதிக்குழு  உறுப்பினர்கள் அருண், சந்துரு, வேலு, ஸ்ரீதர், ஆட்டோ சங்க நிர்வாகிகள் முத்து, முருகேசன், சசி, மாதர் சங்க விஜயலட்சுமி, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.