tamilnadu

தனது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

திருச்சிராப்பள்ளி, அக். 14 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் என்.ஆர்.என். பாண்டியன். இவர், தனது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டிய தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஐபிசி பிரிவு 354, தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ், விஎச்பி நிர்வாகி பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.