tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் தோழர் கே.வரதராசன் முதலாம் ஆண்டு நினைவு தினம்.....

திருச்சிராப்பள்ளி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவரும் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவருமான மறைந்த தோழர் கே. வரதராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி செவ்வாயன்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோழர் கே. வரதராசன் உருவப் படத்தை அவரது மூத்த சகோதரரும், இன்சூரன்ஸ் அரங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான கே. லட்சுமணன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி. எஸ். இந்துராஜ், தீக்கதிர் பொதுமேலாளர் பன்னீர்செல்வம், தீக்கதிர் முன்னாள் பொதுமேலாளர் அனந்தராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சம்பத், அருள்மொழி, வீரமுத்து, வங்கி அரங்க கிளைச் செயலாளர் சந்தானம், இன்சூரன்ஸ் அரங்கம் ஸ்ரீதர், கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு செயலாளர் தர்மா, பகுதிக்குழு உறுப்பினர்கள் சுப்பு, பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் பிரேம், கவிதா, சுந்தரி, விஜயலட்சுமி, வசந்தா உள்பட பலர்  மலர்தூவி மரியாதை  செலுத்தினர்.

புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கே.வி.எஸ். இந்துராஜ் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோழர் கே.வரதராசன் உருவப்படத்தை தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இதில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் இந்துராஜ் குடும்பத்தினர் கலந்து கொண்டு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.திருச்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோழர் கே.வரதராசன் உருவப்படத்தை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் திறந்துவைத்தார். இதில் கட்சியின் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி. எஸ்.இந்துராஜ், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் பன்னீர்செல்வம், ஆட்டோ சங்க மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள்கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீரங்கம் பகுதி குழு அலுவலகத்தில் நந்தகுமார் தலைமையில் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மருங்காபுரி ஒன்றியத்தில் முருகேசன், நாகராஜன் ஆகியோர் தலைமையில் நினைவஞ்சலி  நிகழ்ச்சி நடைபெற்றது.

;