tamilnadu

img

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.9- திருச்சி மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) ஆலோ சனை கூட்டம் வெள்ளியன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.  சங்க மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த செப் டம்பர் 5 ஆம் தேதி கோட்டாட் சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் இரண்டு மாதங்களில் மணல் குவாரி திறக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப் பட்டது. ஆனால் இதுவரை மணல் குவாரி திறக்க வில்லை. எனவே வருகிற 11ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்க ளின் குடும்பத்துடன் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு படுவது என முடிவெடுக்கப் பட்டது.