இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி
திருச்சிராப்பள்ளி, ஆக.14- இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். சாலை வரி, இன்சூரன்ஸ், வாகன எப்சி, வங்கி கடன் மற்றும் வட்டி ஆகிய வற்றை ஓராண்டுக்கு ஒத்திவை க்க வேண்டும். புதிய வேகக் கட்டு ப்பாட்டு கருவி பொறுத்த கட்டா யப்படுத்த கூடாது. ஆர்டிஓ அலு வலக லஞ்ச லாவணியத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலை போக்குவரத்து தொ ழிலாளர் சங்கம், சிறகுகள், உரி மைக்குரல், இணைந்த கரங்கள், தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நல சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கி ழமை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் எல். செல்வம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரி க்கை மனு அளித்தனர்.
ஸ்ரீரங்கம் தாலுகா அலுவல கம் முன்பு சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் நல சங்க மாநில துணை செயலாளர் வீர முத்து, மாவட்டப் பொருளாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை வகி த்தனர். போராட்டத்தில் கோரி க்கை அட்டைகளை கழுத்தில் மாட்டியும், வேகக்கட்டுப்பாட்டு கரு வியை கையில் ஏந்தியும் கோரி க்கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர். தாசில்தார்ஸ்ரீதரிடம் கோ ரிக்கை மனு அளித்தனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவாதியில் இ-பாஸ் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு பொன்ன மராவதி வட்டாட்சியர் மூலமாக மனு கொடுக்கும் போராட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து போக்குவரத்து சங்க பொறுப்பாளர் என்.பக்ரு தீன், காந்தி சிலை ஆட்டோ சங்க பொருளாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் வட்டாட்சியர் திருநா வுகரசிடம் கோரிக்கை மனு க்களை அளித்தனர். அறந்தாங்கி அறந்தாங்கி வட்டாட்சியர் சிவ குமாரிடம், அறந்தாங்கி கோபா லசமுத்திரம் அம்பேத்கர், அப்துல்கலாம் சிஐடியு ஆட்டோ நிலைய தொழிலாளர்கள், கட்டு மாவடி சாலை சேகுவேரா ஆட்டோ நிலைய தொழிலாளர்கள், ஆட்டோ சங்க சிஐடியு பொறுப்பா ளர் கே.தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெயராமன், மானிக்கம் உள்ளிட் மனு அளித்தனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி வட்டாட்சியர் சிவ குமாரிடம், அறந்தாங்கி கோபா லசமுத்திரம் அம்பேத்கர், அப்துல்கலாம் சிஐடியு ஆட்டோ நிலைய தொழிலாளர்கள், கட்டு மாவடி சாலை சேகுவேரா ஆட்டோ நிலைய தொழிலாளர்கள், ஆட்டோ சங்க சிஐடியு பொறுப்பா ளர் கே.தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெயராமன், மானிக்கம் உள்ளிட் மனு அளித்தனர்.
கும்பகோணம்
இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் குடும்பத்துடன் மனு கொ டுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.