புதுக்கோட்டை, ஜூன்.19- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் ஆவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்றுவிழா மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் ஏ.இன்னாசி முத்து தலைமை வகித்தார். கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் ச.தோ. அருணோதயன், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.சண்மு கம் உள்ளிட்டோர் பேசினர். ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காவலர், துப்புர வுப்பணியாளர் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். தண்ணீர் வசதியுடன் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடி யாக அகற்ற வேண்டும். ஆவூர்பட்டி நால்ரோட்டு திடீர்நகர் அரசுப் புறம்போக்கில் குடியிருப்போருக்கு அடிமனைப் பட்டா வழங்க வேண்டும். புறம்போக்கில் இடம்பிடித்து விற்பனை செய்யும் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்டவர்களுக்கு கஜாபுயல் நிவாரணம் வழங்கிடவும், வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவூரிலி ருந்து மண்ணையூருக்குச் செல்லும் இணைப்புச்சாலை யை தார்ச்சாலையா மாற்ற வேண்டும். தேசிய வேலை உறுதித்திட்டத்தில் வேலைநாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.