tamilnadu

img

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திடக் கோரிக்கை

தரங்கம்பாடி நவ.30- நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட குழு உறுப்பினர் பா.ராகேஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் இரா. ஹரி சுர்ஜித் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.  மாவட்டச் செயலாளர் அ.அமுல் காஸ்ட்ரோ, மாநில துணைத்தலைவர் ப.மாரியப்பன் சங்க நிர்வாகிகள் மு.குமரேசன், செ.கபிலன், த.கவியரசன், பா.விக்னேஷ் ஷர்மா, மா.ஐயப்பன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் 5,8 வகுப்புகளுக்கான அரசுப் பொது தேர்வுகளை உடனடியாக ரத்து செய், இலவச மடிக்கணினிகளை உடனே வழங்கிடு, ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்பிடு, அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.