tamilnadu

கட்டுமானத் தொழிலாளருக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, டிச.2- கட்டுமானத் தொழிலா ளர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் விகே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  திருச்சி மாவட்டத்தில் கட்டுமான பணியில் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்கள் அன்றாடம் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சித்தாள், மண்வெட்டியாள், கொத்தனார், மேஸ்திரி என்று  நாள் ஒன்றுக்கு மாநகர பகுதியில் மட்டும் 6 ஆயிரம் பேர் வேலைக்கு வருகின்ற னர். இப்படி வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு தொடர் மழையால் கடந்த 4 நாட்க ளாக வேலை இல்லை.  மழைகாலத்தில் கட்டு மானப் பணிகள் அவ்வள வாக நடைபெறாது சீதோசன நிலை வெப்பமாக இல்லாத தால் கலவைகள் உடனே காயாது இதனால் கான்கிரீட், பூச்சு வேலைகள் நடக்காது எனவே பொறியாளர்கள் மற்றும் வீடுகட்டும் உரிமை யாளர்கள் மழைக் காலங்க ளில் பெரும்பாலும் கட்டட வேலை செய்வதில்லை தற் போது கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரு வதால் 60% கட்டட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால் கட்டிட பணிக்கு வரும் கூலி ஆட்கள் வேலை  கிடைக்காமல் மதியம் வரை காத்திருந்து வீடுகளுக்கு திரும்பவில்லை ஏற்பட்டுள் ளது. மழை நின்று வெயில் அடித்தால் மட்டும் தான் மீண் டும் வேலை. எனவே தமிழக அரசு கட்டுமான தொழிலாளர் களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறி யுள்ளார்.