திருச்சிராப்பள்ளி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். 12(3) ஒப்பந்தப்படி பருவகால பணியாளர்களை காலதாமதம் செய்யாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நுகர்பொருள் வாணிப கழக திருச்சி மண்டல அலுவலகம் முன் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன் தலைமை வகித்தார். தொமுச மாநில பொதுச்செயலாளர் வள்ளுவன் பேசினார். சிஐடியு திருச்சி மண்டல செயலாளர் ராசப்பன், எல்பிஎப் ரவீந்திரன், ஐஎன்டியுசி சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.