திருச்சிராப்பள்ளி, நவ.24- தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அள விலான துளிர் வினாடி வினா போட்டி ஞாயிறு அன்று தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். போட்டியில் திருச்சி மாவட்டத்தி லுள்ள 28 பள்ளிகளில் இருந்து 84 குழுக்களை சேர்ந்த 250 மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். போட்டி யின் நிறைவு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மகேஷ்வரன், கல்லூரி மாணவர்கள் கிளை செயலாளர் முகம் மது யாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கல்வி அதி காரி பாரதி விவேகானந்தன் வழங்கி சிறப்புரையாற்றினார். மாணவர்களை வாழ்த்தி மாநில துணைத்தலைவர் சுகுமாறன், மாநில பொருளாளர் மனோகர், அம்பேத்கர் கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், தமிழக ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் சுப்பிர மணியன், இந்தியன் வங்கி அதிகாரி கள் சங்க திருச்சி மண்டல செயலா ளர் சந்தானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டியில் முதல் 3 இடங்களை வென்ற மாணவ, மாண வியருக்கு கேடயம், பதக்கம், சான்றி தழ் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.