tamilnadu

img

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்

அறந்தாங்கி, ஏப்.7- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி 6-வது பட்டமளிப்பு விழாசனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர்வி.ஜெயராஜ் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி.பாரதிதாசன் இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் 464 பேருக்கு பட்டங்களை வழங்கிசிறப்புரையாற்றினார். அறந்தாங்கி சார்பு நீதிபதி எம்.அமிர்தவேலு மற்றும் அறந்தாங்கி நீதிதுறை நடுவர் சி.கலையரசி ரீனா டி.எஸ்.பி கோகிலா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

;