tamilnadu

புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் முக்கிய செய்திகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, நவ.25- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2019 வெள்ளிக்கிழ மை காலை 10 மணிக்கு புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர் கள் கலந்து கொண்டு விவசாயிக ளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக் கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து  பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நவ.28-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

திருவாரூர், நவ.25- திருவாரூர் மாவட்ட விவசாயி களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவாரூர் ஆட்சிய ரக அலுவலக கூட்டரங்கில் நடை பெறவுள்ளது. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவ றாமல் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் த.ஆனந்த் தெரி வித்துள்ளார்.

;