கலைத்துறையினர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை: கலைத் துறையில் சாதனைப் படைத்த கலைஞர்கள் அரசு விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தது. தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக 18 வயது அதற்குட்பட்டோருக்கு ‘கலை இளமணி” 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு ‘கலை வளர்மணி” 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு ‘கலை சுடர்மணி” 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு ‘கலை நன்மணி” 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு ‘கலை முதுமணி” என அகவைக்கு தக்க விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரலிசை பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாடக கலைஞர்கள், நாதசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள். கரகம், காவடி, பொய்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம், கூத்து, முதலிய கலைகள் உள்ளிட்ட அனைத்து நாட்டுபுறக்கலைகள் மற்றும் பாடலாசிரியர்கள் புதுக்கோட்டை மாவட்டக் கலைஞர்களுக்கான விருது பெற தங்களது சுய விவரகுறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து சான்றுகளுடன் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, நைட்சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி-620006 என்ற முகவரிக்கு 10.03.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மாவட்டக் கலை மன்ற விருதாளர் தெரிவுக் குழுவினரால் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு அரசு விழாவில் இவ்விருது வழங்கப்படும். இறுதி தேதிக்கு பிறகு பெறும் விண்ணப்பங்கள் மற்றும் வயது சான்று ,கலைத்துறையில் ஆற்றியுள்ள பணி விவரங்கள் போதிய அளவு இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஏற்கனவே இவ்விருதுக்கான விண்ணப்பம் அளித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தை 0431-2434122 என்ற தொலைபேசியில் தொடர்புக் கொள்ளலாம்.
தலைக்கவசம் விழிப்புணர்வுக் கூட்டம்
புதுக்கோட்டை, பிப்.28- திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்க டேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை நகரம் திருக்கோகர்ணம் காவல் நிலை யத்தின் சார்பாக இருசக்கர வாகன தலைக்கவசம் விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உரையாற்றினார். திருக்கோகர்ணம் காவல் ஆய்வா ளர்கள் கௌரி, பெரியசாமி, சரண்யா, யுவராணி, தiலைமைக் காவலர் பானுமதி ஆகியோர் பேசினர். முன்னதாக பள்ளியின் ஆலோசகர் வழக்கறிஞர் செந்தில் குமார் வரவேற்க, ஆசிரியர் காசா வயல்கண்ணன் நன்றி கூறினார்.
பள்ளி ஆண்டு விழா
அறந்தாங்கி, பிப்.28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் இயங்கி வரும் ஜடியல் கல்வி குழுமத்தில் உள்ள ஜடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 26 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வெங்க டேஸ்வரா பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ஜடியல் பள்ளி தாளாளர் பி.சேக் சுல்தான், அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச் செல்வம், தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளின் மாநில துணைச் பொதுச்செயலாளர் சி. ஆர்.ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளியில சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பாராட்டி சிறப்புரையாற்றினார் திரைப்பட இயக்குநர் சேரன். மேலும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வருகை புரிந்து பணி யாற்றிய ஆசிரியர், ஆசிரியை களுக்கு பரிசு வழங்கி பாராட்டப் பட்டனர். நிகழ்ச்சியில் கராத்தே பிரதர்ஸ் சமூக அறக்கட்டளை தலைவர் வி.சுப்பிரமணியன், ராஜேந்திரபுரம் ஜமாத் தலைவர் எம்.எம் அப்துல் சலாம், அறந்தை ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் தங்கதுரை, பள்ளிகளின் ஆய்வா ளர் செல்வம், சிலட்டு விவேகானந்தா பள்ளி தாளாளர் கருணாகரன் வாழ்த்தி பேசினர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளி நிர்வாக அலுவலர் சித்திசுலைலா வரவேற்று பேசினார். நிறைவாக நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.இம்ராம்கான் நன்றி கூறினார்.