tamilnadu

img

ஜே.என்.யு மாணவர்களை தாக்கிய குண்டர்கள் கைது கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.6- தில்லி ஜே.என்.யு மாண வர்களை தாக்கிய குண்டர்க ளை கைது செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் திங்களன்று திருச்சி மரக்கடை ராம கிருஷ்ணா மேம்பாலம் அருகில் கண்டன முழக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாந கர் மாவட்டச் செயலாளர் பா.லெனின் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், துளசி ஆகியோர் பேசினர். வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.  இதே போல் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் சார்பாக கிளைத் தலைவர் வீரமுத்து தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கிளை நிர்வா கிகள் பிடல்காஸ்ட்ரோ, ஜோதிபாசு, கோடீஸ்வ ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி கண்டன உரையாற்றினார். கிளைச் செயலாளர் சக்தி வேல் நன்றி கூறினார்.

;