tamilnadu

img

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. முதியோர், மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு சமூக நீதி மானியத்தை வெட்டுவதை கைவிட வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் பயணிகள் ரயில்களை தனியாருக்கு கொடுத்து ஆம்னி பேருந்து கட்டணம் போல கட்டணம் உயர்த்தி கொள்ள கார்ப்பரேட்டுக்கு அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும். ப்ரிவிலேஜ் பாஸ் வைத்துள்ள ரயில்வே ஊழியர்களுக்கும் கட்டுப்பாடு விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்ஷிண ரயில்வே எம்ளாயீஸ் யூனியன் சார்பில் வியாழனன்று திருச்சி ஜங்சனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயூ கோட்ட தலைவர் மொய்தீன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், டிஆர்இயூ பொதுச்செயலாளர் மேத்யூசிரியாக், உதவி பொதுச் செயலாளர்கள் மாதவன், மனோகரன், கோட்ட செயலாளர் கண்ணன், எச்டிபி-டிபிஜெ வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.