திருச்சிராப்பள்ளி, ஆக.27- வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டதை கண்டித்தும் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மதிமுக சார்பில் துறையூர் பேருந்து நிலையம் அருகில் திங்களன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் வீரவிஜயன், மாவட்டக் குழு உறுப்பினர் தங்கவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சங்கர், சிபிஎம் ரவி, பொன்னுசாமி, சிபிஐ சார்பில் சேகர், செல்வராஜ், திமுக சார்பில் அண்ணாதுரை, மகாலிங்கம், மதிமுக சார்பில் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் லால்குடி ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் திலக்பிரபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புறநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகதீசன் ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலு, மோகன், மணிகண்டன், சதாசிவம், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக்குழு உறுப்பினர் அ.மணவாளன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆர்.சோலையப்பன், ஏ.எஸ்.ஓவியா, எஸ்.விக்கி, பாபு, விஷாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சை இரயிலடியில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.மாலதி, என்.சுரேஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.சரவணன், கே.காந்தி, மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி.கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் துணைத் தலைவர் சத்தியநாதன், துணைச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாநகரச் செயலாளர் வடிவேலன், தமுஎகச மாநகரச் செயலாளர் பாரிசிவன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச் செல்வி, சிஐடியு முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.அன்பு, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த்சாமி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்டப் பொருளாளர் ரவிசங்கர் மற்றும் ஞானமாணிக்கம், செங்குட்டுவன், தவ.கணேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.