tamilnadu

img

பொன்மலை தியாகிகள் தினம்

திருச்சிராப்பள்ளி, செப்.6-  பொன்மலை தியாகிகள் தினம் மற்றும் அகில இந்திய மாநாட்டு நிதி அளிப்பு சிறப்பு பேரவை சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் வியாழனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில்  நடைபெற்றது. கூட்டத்தி ற்கு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் வீரமுத்து ஆகியோர் பேசினர். சிஐடியு துணை பொதுச்செ யலாளர் குமார் சிறப்புரை யாற்றினார்.  கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக தரைக்கடை சங்கம் சார்பில் ரூ 70 ஆயிரம் உள்பட 1 லட்சத்து 10 ஆயிரத்தை பொதுச்செயலாளர் குமாரிடம் மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் 2வது தவணையாக வழங்கினார். சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க சீனிவாசன். தரைக்கடை சங்க கணேசன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.