tamilnadu

img

வாய்க்கால்களை தூர்வாரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு கூத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாய்க்கால்களை தூர்வாரி கடை மடை வரை தண்ணீர் செல்ல உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று கூத்தூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் மற்றும் மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலா ளர் கனகராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், குணசேகரன், கூத்தூ் கிளை செயலாளர் தேவன் ஆகியோர் பேசினர். விதொச ஒன்றிய செயலாளர் சேது ராமன், ஜோதிபாசு உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.