tamilnadu

img

பெரியார், அண்ணா சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர் மே 7-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், மதிமுக கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, மதிமுகவினர் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பேராவூரணி ஆவணம் சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும், சேது சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் ஊர்வலமாக சென்று நகரத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வ.பாலசுப்பிரமணியன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் குறிச்சி மணிவாசகம், நகரச் செயலாளர் குமார், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;