tamilnadu

பெரம்பலூர் ,கும்பகோணம் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

பெரம்பலூரில் விவசாயிகள்  குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 24- பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27-ம் தேதி காலை 10 மணியளவில் ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் வேளாண் சம்பந்தமான உதவிகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற் கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே கூட்டத்தில் விவசாயிகள் தங்க ளது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

2-வது திருமணம் செய்ய முயன்றவர் கைது 

கும்பகோணம், ஜூன் 24-  கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை மதனத்தூர் அக்ரஹாரத்தில் வசிப்பவர் சக்கரவர்த்தி மகன் சுபாஷ் சந்திரபோஸ்(42), அலகாபாத்தில் ராணுவ வீரராக பணி யாற்றி வந்தார். இவர் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா நாசிக் ரோடு பகுதியில் வசித்து வந்த செல்வ ராணி(41) என்பவரை முறைப்படி திருமணம் செய்து இவர் களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ், தனது மனைவிக்கு தெரியாமல் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவரை சுவாமி மலை கோயிலில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு நடந்தது. இதையறிந்த செல்வராணி, சுவாமிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல்துறையினர், திருமணத்தை நேரில் சென்று தடுத்து நிறுத்தினர். மேலும் சுபாஷ் சந்திரபோஸை கைது செய்து விசாரணை நடத்தினர்.

புத்தூர் அரசு கல்லூரி விழா  

சீர்காழி, ஜூன் 24- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் உலக யோகா தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லெட்சுமி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சசிக்குமார் வரவேற்றார். தமிழ்துறை தலைவர் சாந்தி, யோகாசனப் பயிற்சியின் பயன்கள் பற்றி விளக்கிப் பேசி னார். சீர்காழி மனவளக் கலை மன்ற பயிற்சி மைய பயிற்றுநர் சூர்யபிரகாஷ் யோகாசனத்தை செயல் விளக்கத்து டன் செய்து காட்டினார். பேராசிரியர் வினோத் நன்றி கூறி னார். இதே போல் கொள்ளிடம் சீனீவாசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தின விழாவில் பள்ளி தாளா ளர் முருகேசன், முதல்வர் கனகசபை மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆதிதிராவிடர் விடுதியில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

சீர்காழி, ஜூன் 24- நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள உயர் நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்தாண்டு விடுதியில் சேர்ந்து கொள்வதற்கான கலந்தாய்வு, சாமியம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் வரும் 26-ந் தேதி காலை 10 மணியளவில் நடைபெறு கிறது. விருப்பமுள்ள மாணவர்கள் ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவைகளுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று சாமியம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி காப்பாளர் ரவி தெரிவித்துள்ளார்.