tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

தரங்கம்பாடி, டிச.20- மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர். இலுப்பூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆசிக் ரஹ்மான், 10 ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் டி.ஆர்.ராணி ஆகி யோர் வார்டு வாரியாக வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவிக்கின்றனர். கொத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.சந்திரமோகன் கத்தோலிக்க திருச்சபையின் நீல வெலி எஸ்டேட் பங்குத் தந்தையை வெள்ளியன்று சந்தித்து ஆசிப் பெற்று வாக்கு சேகரித்தார்.