tamilnadu

img

லால்குடியில் பாரிவேந்தர் பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று திருச்சி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். இதில் அவர் பேசியதாவது:- 100 நாள் வேலைத்திட்டத்தில் வைப்பூரையும் சேர்க்கவும், 100 நாள் திட்டத்தை 150 நாளாக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளுக்கு குளிர்பதன கிடங்கு, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பேன் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சந்திரன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், லால்குடி ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், திமுக எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

;