tamilnadu

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து

தஞ்சாவூர், மே 19-டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 5 முதல் 10 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும்இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழுமுடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டக்குழு சார்பில், காவிரிடெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும், மத்திய மோடி அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்புகுறித்து விளக்கும் பேரவை கூட்டம்,தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலைநடைபெற்றது. பேரவைக் கூட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்ஆர்.மனோகரன் தலைமை வகித்தார்.கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், அறிவியல் இயக்கம் வ.சேதுராமன் ஆகியோர் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கஉரையாற்றினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், எம்.மாலதி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், முன்னணி தோழர்கள், விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம்,தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன அரங்க முன்னணி நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தின் தீமைகளை விளக்கி ஜூன் 5-ஆம் தேதி முதல்10 ஆம் தேதி வரை தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என தீர்மானிக் கப்பட்டது.