திருச்சிராப்பள்ளி, ஜூலை 20- மாட்டுக்கறி தின்றதால் இஸ்லாமிய இளைஞர் மீது கொலை வெறி தாக்கு தல் நடத்தியவர்களின் வன்முறை வெறி யாட்டத்தை கண்டித்தும். வன்முறை யாளர்களை கைது செய்ய வலியுறுத்தி யும் சிறுபான்மை மக்கள் நலக்குழு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தென்னூர் அண்ணாநகர், ஆழ்வார்தோப்பு கிளைகள் சார்பில் வெள்ளியன்று மாலை ஆழ்வார் தோப்பு பகுதியில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு கிளைத் தலைவர்கள் மஜீத், விஜய் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் அன்வர்உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் வின்சென்ட், மாவட்ட செய லாளர் ரபீக், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட தலைவர் சந்திரபிர காஷ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை மக் கள் நலக்குழுவினர், வாலிபர் சங்கத்தி னர் மற்றும் மாதர் சங்க வள்ளி, சித்ரா உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். கிளைச் செயலாளர் கலீல்ரகு மான் நன்றி கூறினார்.