tamilnadu

அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு

திருச்சிராப்பள்ளி, செப்.3- அறிவியல் வளர்ச்சி, அறிவியல் ஆய்வு மனப்பான்மை மற்றும் அறிவியல் சிந்தனை மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டும் (2019) மாணவர்களின் எண்ணங்களை இயற்பியல், வேதியியல்,  உயிரியியல், மரபுசார் அறிவியல், புதிர் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், படமும் செய்தியும், சொற்சுருக்கம், நீட் தேர்வு ஆகியவற்றில் விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான, துளிர் திறனறிதல் தேர்வு கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளில் நடைபெற உள்ளது.  இளநிலை –(ஜூனியர் 6-8ம் வகுப்பு) உயர்நிலை - (சீனியர் 9-10ம் வகுப்பு) மேல்நிலை - (சப் சீனியர் 11-12ம் வகுப்பு) பதிவுக்கட்டணம் ரூ.125, துளிர் (தமிழில்-மாதம் ஒன்று) ஜந்தர் மந்தர் (ஆங்கிலத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று) மாணவர்களுக்கான அறிவியல் புத்தகம் 2020 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை வருடம் முழுவதும் வழங்கப்படும். குறிப்பாக இந்த வருடம் முதல், துவக்கநிலை - (பிரைமரி 4 - 5ம் வகுப்பு) மாணவர்களுக்கும் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற உள்ளது. பதிவுக்கட்டணம் ரூ. 50 அறிவியல் வெளியீடுகளிலிருந்து ரூ.50 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். ஒரே நாளில் மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நடைபெறும். பதிவு செய்ய கடைசி நாள்-15.10.2019, தேர்வு நாள்-2.11.2019.  மாவட்டத் தொடர்புக்கு, முசிறி எஸ்.நடராசன் - 9442510178, எப்.ஜான்சன் - 9944934424, திருச்சி மாநகரம், ஆர். சீத்தா - 8870524977, எஸ்.மாரிமுத்து – 8012708677, துறையூர் எஸ்.மகேஸ்வரன் - 9943525207, லால்குடி திருமுருகன் - 9943010834, மணப்பாறை பாலு – 9789127764, எல்.கோகுல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், துளிர் திறனறிதல் தேர்வு - 2019.  தொடர்புக்கு : 9442567839, Email: lgokul52@gmail.com, ஆ.மணிகண்டன், மாவட்டச் செயலாளர்  : 9787866135, Email : manikandanjmc2014@gmail.com