tamilnadu

லால்குடியில் ஆக.17 இல்  எரிவாயு குறைதீர்கூட்டம் 

 திருச்சிராப்பள்ளி, ஆக.14- எரிவாயு நுகர்வோர்களுக்கான சிலிண்டர் வழங்கு வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முக வர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் லால்குடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஆக.17) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் லால்குடி வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர் மறுநிரப்பு பதிவு செய்து பெறுவதில் காலதாம தம் மற்றும் முறைகேடுகள் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முக வர்களின் தாமதப்போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர் பான புகார்கள் மனுக்கள் மூலமாக பெற்று உரிய நட வடிக்கைகள் எடுக்கப்படும். குறைதீர்க்கும் கூட்டத்தில் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை மனுக்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.