நாகப்பட்டினம், ஜூன்10- வங்கக் கடலோர மீனவர்களுக்கு விசைப் படகுகளில் சென்று கடலில் மீன் பிடிக்க ஆண்டுதோறும் ஏப்ரல்-15 முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்தத் தடைக்காலம், ஜூன் -14 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், நாட்டுப் படகு மற்றும் பைபர்ப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வந்தனர். கடந்த சில நாட்களாக வேதாரணியம் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதால் கோடியக்கரை, கோடியக்காடு, மணியன்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.