tamilnadu

img

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

சீர்காழி, செப்.16- நாகை மாவட்டம் புத்தூர் சீனிவாசா சுப்பராயா தொழில்நுட்ப கல்லூரியில் குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார்.  வட்டார மருத்துவ அலுவலர் பபிதா கலந்து கொண்டு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனை அகற்றும் வழிமுறை குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மாநிலத்தலைவர் வாசுகி அருள் கலந்து கொண்டு அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்துப் பேசினார். கொள்ளிடம் வட்டார அளவிலான ஊட்டச்சத்து அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;