tamilnadu

img

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

தஞ்சாவூர் ஜூன்.1-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்து பேசினார். டாக்டர்கள் ஆர்.ரஞ்சித், ரிஸ்வானா பேகம், சேது கவுதம் மருந்தாளுநர் சரவணன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கண்ணன், ஓய்வுபெற்ற மருத்துவ துறை அலுவலர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர். புரதச்சத்து மாவு, இரும்பு சத்து திரவம், ஆவின் நெய், பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, கைத்துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.