tamilnadu

img

புதிய கிளை அமைப்பு

நாகப்பட்டினம், ஆக.30- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க புதிய கிளை அமைப்புக் கூட்டம் நாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு என்.பாபுராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெ.தங்கமணி, சங்க அமைப்பின் தேவைகளை விளக்கிப் பேசினார். கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.செல்வராஜ், நகராட்சி ஊழியர் சங்க நாகைக் கிளைச் செயலாளர் சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க மாநிலத் தலைவர் நா.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் நாகை கிளை உறுப்பினர்களாக 20 பேரும், அமைப்பாளராக என்.பாபுராஜும் தேர்வு செய்யப்பட்டனர்.