tamilnadu

img

தேசிய கல்வி கொள்கை நகல் எரிப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26 - மத்திய அரசு 2019-ம் ஆண்டு புதிதாக கொண்டு வருவ தாக அறிவித்துள்ள கல்வி கொள்கையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. 

திருச்சி

செவ்வாயன்று திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி நுழைவு வாயில் முன் கல்லூரி தலைவர் சூர்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் புதிய கல்வி கொள்கை அரசாணை நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், செயற்குழு உறுப்பினர் துளசி உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று பொன்மலை திருஇருதய மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஹரி தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் மோகன் சிறப்புரையாற்றினார். போராட் டத்தில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

கும்பகோணம்
இந்திய மாணவர் சங்கத்தின் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் சார்பாக நகரத் தலைவர் எஸ்.பிரபாகரன் தலை மையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.பாலகுரு போராட் டத்தை விளக்கி பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் விக்னேஷ், கிளைச் செயலாளர் ராஜ் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நித்திஸ், சந்தோஷ், அகத்தி யன், ராஜி, கார்த்திகா உள்ளிட்ட 22 பேரை காவல்துறை யினர் கைது செய்தனர்.