நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் அருகே பூதனூர் வீரசோழன் ஆற்றில் ரூ.4 கோடியே 37 லட்சம் மதிப்பில் படுக்கையணை, கதவணை, நீரொழுங்கிகள் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத் துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் இப்பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.