tamilnadu

முசிறி மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

குடிநீர் திருட்டு: மின் மோட்டார்கள் பறிமுதல்

முசிறி, ஜூன் 28- குடிநீர் வரும் போது மோட்டார் வைத்து உறிஞ்சிய மோட்டார்களை முசிறி பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் போது சில விதிமுறைகளை மீறி மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இவ்வாறு உறிஞ்சினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து விதிமுறைகளை மீறியதாக மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மேலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், குடிநீரை வீணடிக்காமல் சேமித்து பயன்படுத்த வேண்டும். விதிமீறலில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் அறிவுறுத்தினார்.

கூட்டுறவு பால் சேமிப்பு நிலையம் திறப்பு

முசிறி, ஜூன் 28- திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சி கீழபள்ளம் கிராமத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் சேமிப்பு நிலைய துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஆவின் மேலாளர் தமிழ்ச்செல்வன், பால் சேமிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். மேற்பார்வையாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மணல் திருட்டில் ஈடுபட்டவர்  குண்டர் சட்டத்தில் கைது

முசிறி, ஜூன் 28- திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சோழம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(24). இவர் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுரேசை காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது மணல் திருட்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து சுரேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். சிறையிலிருந்த சுரேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தற்போது வழக்கு பதிந்துள்ளது. 

குடிநீர் புகார் தெரிவிக்கலாம்  

பொன்னமராவதி, ஜூன் 28- பொன்னமராவதி பேரூராட்சியில் மக்களின் நகர் தூய்மை, குடிநீர் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்க எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடிநீர், தெருவிளக்கு, நகர் துாய்மை போன்ற புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புகார் தெரிவிக்க பேரூராட்சி செயல் அலுவலர் அலைபேசி எண் 78240- 58288 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

108 ஆம்புலன்ஸ் உதவியாளர் பணியிடம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 28- திருச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 108 வளாக அலுவலகம் உள்ளது. இங்கு வரும் 30-ம் தேதி 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணி மற்றும் இஆர்ஓ பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகம் நடத்தி தேர்வு செய்யப்படுவர். தேர்வானவர்களுக்கு 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவிற்கான ரூ.100 படியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுயதொழில் தொடங்க கடனுதவி  

திருச்சிராப்பள்ளி, ஜூன்,28- திருச்சி மாவட்ட தொழில் மையம் மூலம் வேலை வாய்ப்பற்ற  இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க தமிழக அரசின் மானியத்துடன் வங்கி மூலம் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்- பெண் இருபாலர் கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வயது 18 முதல் 35 வரை ஆகும்.  சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும்.  இணையதள முகவரி  hவவி:ஃஃறறற.அளஅநழடெiநெ.வn.பழஎ.inஃரலநபிஃ (ழடெiநெ) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரிக்கு பத்து நாளுக்குள் விண்ணப்பத்தினை அனுப்பிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0431-2460331, 0431-2460823 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

பொருளாதார கணக்கெடுப்புப் பணி

திருச்சிராப்பள்ளி, ஜூன்,28-      திருச்சி மாவட்டத்தில் 12 நகர்ப்புற மாதிரிகளிலும், 10 கிராமப்புற மாதிரிகளிலும் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து அவர்களது  சொந்த நிலம், கால்நடைகள், சாகுபடிபரப்பு, விவசாயக்கருவிகள், வரவு, செலவு, கடன் போன்ற பொருளாதார நிலைக் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இவ்விவரங்களின் அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு கொள்கை முடிவுகள் மற்றும் திட்டமிடல் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். 

பேராவூரணி பகுதியில் மின்தடை

தஞ்சாவூர் ஜூன்.28- பேராவூரணி, சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சனி, ஞாயிறு, திங்கள்கிழமை வரை திருச்சிற்றம்பலம், வா.கொல்லைக்காடு, ஒட்டங்காடு, பெருமகளூர், சேதுபாவாசத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், அவ்வப்போது மின்தடை ஏற்படும் என பேராவூரணி மின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.