திருத்துறைப்பூண்டி, ஜன.6- எஸ்.ஜி.எம் என்ற எஸ்.ஜி.முருகையன் நினைவு தின நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி மாவட்டம் சித்தமல்லியில் வியாழனன்று நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், எஸ்.ஜி.எம் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கே.தமிழ்மணி, மாவட்ட தலைவர் அரசு தாயுமானவன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.கே.வேலவன், வர லாற்று ஆய்வாளர் வெங்கடேசன், வழக்கறி ஞர் இன்குலாப் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். எஸ்.ஜி.எம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலை வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளருமான அ.பாஸ்கர் எழுதிய நூலை எஸ்.ஜி.எம் அவர்களுடைய மகன் எஸ்.ஜி.எம்.லெனின் வெளியிட, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பெற்றுக்கொண்டார்.