tamilnadu

img

அன்னை மீனாட்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

அறந்தாங்கி, ஏப்.30-அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஆர்.சண்முகப்பிரியா 488 மதிப்பெண்கள் பெற்று கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். மாணவி ஏ.பிரித்தீ 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடமும், எம்.சமீரா ஜாஸ்மின் 482 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர். மேலும் 480-க்கு மேல் 20 மாணவர்களும் 450-க்கு மேல் 25 மாணவர்களும் 400க்கு மேல் 17 மாணவர்களும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மேலும் மாணவி எம்.சமீராஜாஸ்மின் தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை புரித்த மாணவர்களையும், இதற்கு உறுதுனையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

;