tamilnadu

மண்ணச்சநல்லூர் சரவணபவ பள்ளி சிறப்பிடம்

மண்ணச்சநல்லூர், ஏப்.30மண்ணச்சநல்லூர் அருகே இராஜாம்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீசரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் கபிலாதேவி நானூற்று எழுபத்தைந்து மதிப்பெண்களும், அட்சயா நானூற்று எழுபத்து நான்கு மதிப்பெண்களும், சந்தோஸ் நானூற்று ஐம்பத்தெட்டு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 20 மாணவ- மாணவிகள் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள், மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் சரவணன், பள்ளி முதல்வர் ஆகியோர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்தி பாராட்டினர். 

;