tamilnadu

கும்பகோணம் ,தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் ஜூன் 28- கும்பகோணம் அரசு ஆடவர் கலை கல்லூரி முன்பு திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர் சோழராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து முழக்கமிட்டனர். நகர செயலாளர் தமிழழகன் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில் மாவட்ட துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் மணிவண்ணன் நகர ஒன்றிய அமைப்பாளர்கள் விக்னேஷ் தேவராஜ் மணிவர்மன் தினேஷ் துணை அமைப்பாளர்கள் கார்த்தி அசோக்ராஜ் பாலாஜி பிரபாகரன் மணிகண்டன் செந்தில் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை நகலை எரித்து ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளுக்கு பாட நூல்கள் வழங்கல்

தஞ்சாவூர் ஜூன்.28- தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட நூல்கள் 2,00,852 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு பயிலும் 1,11,738 மாணவ- மாணவிகளுக்கு இலவச வண்ண சீருடைகள் தலா 2 செட் வீதம் வழங்கப்படவுள்ளது. 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 49,699 மாணவ, மாணவியருக்கு இலவச வண்ண பென்சில்கள் வழங்கப்பட்டு வருகிறது. 1 முதல் 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச கிரையான்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் அரசின் சிறப்புத் திட்டங்களின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு 14 வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

விபத்தில் வாலிபர் பலி

தஞ்சாவூர் ஜூன்.28- ராமநாதபுரம் மாவட்டம் தத்தங்குடியைச் சேர்ந்தவர் அழகர்சாமி(50), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் பேராவூரணி அடுத்த கழனிவாசல் கிராமத்தில் தங்கி வயல்வெளியில் ஆட்டு மந்தை(கிடை) அமைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில், சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள ஒரு வயலில் கிடை போடுவதற்காக தனது உறவினர் பால்சாமி என்பவருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பால்சாமி மொபட்டை ஓட்டி சென்றார்.  அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகர்சாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பால்சாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரசு சிறப்புப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

புதுக்கோட்டை, ஜூன்.28- புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பார்வையற்றோருக்கான அரசுப் சிறப்பு பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.  இப்பள்ளி குழந்தைகளுக்கு பிரெயில் முறையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை கற்பிப்பதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகள், ஆண்டுக்கு ஒருமுறை கல்விச் சுற்றுலா, மேம்பட்ட கணினி பயிற்சி வகுப்புகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 04322- 226452, 97895-33964 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

புதுக்கோட்டை, ஜூன்.28- புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2018-19 முன்னிட்டு நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பயனுறும் வகையிலும், விலை வீழ்ச்சி பாதிப்பிலிருந்து காக்கும் வகையிலும் மாவட்டத்தில் ஏற்கனவே 18 நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  தற்போது பொன்னமராவதி தாலுகா சடையம்பட்டி கிராமத்தில் 29-ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை  செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏரியை மீட்டுத் தரக் கோரிக்கை  

புதுக்கோட்டை, ஜூன்.28- புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2018-19 முன்னிட்டு நெல் அறுவடை தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பயனுறும் வகையிலும், விலை வீழ்ச்சி பாதிப்பிலிருந்து காக்கும் வகையிலும் மாவட்டத்தில் ஏற்கனவே 18 நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது பொன்னமராவதி தாலுகா சடையம்பட்டி கிராமத்தில் 29-ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பு முகாம்

அறந்தாங்கி, ஜூன் 28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி வேங்கூரில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட உதவி ஆணையர்(கலால்) கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. வட்டாச்சியர் சூரியபிரபு வரவேற்றார் முகாமில் 42 மனு வரப் பெற்றது இதில் 33 பயனாளிகளுக்கு ரூ1.87500 மதிப்பிலான கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது முகாமில் தனி வட்டாட்சியர், கோட்ட கலால் அலுவலர் நாகுடி சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.