tamilnadu

img

திருமயம் பகுதிகளில் கார்த்தி ப.சிதம்பரம் வாக்கு சேகரிப்பு

பொன்னமராவதி, ஏப்.5-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம், திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி, அரிமளம், திருமயம் ஆகிய ஒன்றியங்களில் 30 இடங்களில் பரப்புரை செய் தார். பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக கார்த்தி ப.சிதம்பரம் பேசியது “தமிழக தொழில் மற்றும் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு இரண்டுகாரணங்கள். ஒன்று ஜிஎஸ்டி தவறாக அமல்படுத்துவது. இரண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கை. பண மதிப்பு நீக்க நடவடிக்கை என்பது கோமாளித் தனமான ஒரு முடிவு. இந்த இரண்டு காரணங்களுக்காகவே மோடிக்கு எதிராக வாக்களிப்பார்கள்.கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள்ஆகியோர் ஒற்றுமையாக இருக்கிறோம். தயவு செய்து வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். வைரஸ் உடலுக்குள் போச்சுன்னா நாம் மருந்து சாப்பிட்டு அதை வெளியேற்றுவோம். பிஜேபி என்ற வைரஸை ஊருக்குள் விட்டு விடாதீர்கள். அந்த வைரஸ்நம்ம ஊருக்கு வந்துருச்சுன்னா நமக்குள் இருக்கிற சமத்துவம் கெட்டுப் போய் விடும். தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சுலபமாக சந்திக்கலாம். என்ன உதவி என்றாலும் தயங்காமல் செய்துதருவேன் என்றார். இந்த பிரச்சார பயணத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திமுகதெற்கு மாவட்ட செயலாளரும், திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ரகுபதி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் நா.பக்ருதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

;