tamilnadu

மே 11-ல் அரவக்குறிச்சியில் கே.பாலகிருஷ்ணன் பரப்புரை

கரூர், ஏப்.26-அரவக்குறிச்சி தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும் என்றார் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி.கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் கார்வழி, குமாரவலசு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்து அவர் பேசுகையில், க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளும் பயன் பெறும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படும். இப்பகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த புதிதாக அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும். கார்வழி அரசுப் பள்ளி தரம் உயர்த்தப்படும் என்றார்.பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி, க.பரமத்தி ஒன்றிய திமுக செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். 

;