tamilnadu

img

ஜன.8 சிஐடியு அகில இந்திய வேலை நிறுத்த தெருமுனை பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, டிச.23- ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருச்சி பாலக்கரை எடத்தெரு மற்றும் எட மலைப்பட்டி கடைவீதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.  எடத்தெரு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் குணசேகரன் தலைமை வகித்தார். வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலளர் ரெங்கரா ஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மணி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் துரைராஜ், தொமுச பேரவை செயலா ளர் எத்திராஜ், ஏஐசிசிடியு தேசிகன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொமுச மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.  எடமலைப்பட்டிபுதூர் கடைவீதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு எச்எம்எஸ் மாவட்ட நிர்வாகி ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலளர் ரெங்கராஜன், மாவட்டப் பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஜான்சன், மாதர் சங்க மலர்கொடி, தொமுச மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர். சிஐடியு கட்டுமான சங்க தலைவர் சேது நன்றி கூறினார்.

;