தரங்கம்பாடி, ஜூன் 11- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் கலால்துறை உதவி ஆணையர் பழனிகுமார் தலை மையில் ஜமாபந்தி முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் பரசலூர், மேமாத்தூர், இளையாளூர் உள்ளிட்ட கிரா மங்களுக்கான ஜமாபந்தியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். வட்டாட்சியர் சுந்தரம், ஆர்.ஐ கவிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் பன்னீர்செல்வம், சிவ ராமகிருஷ்ணன், கணேஷ்குமார், கிருஷ்ணகுமார், சக்தி வேல் திவ்யப் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.