நாகப்பட்டினம், ஜூன் 22 - கல்விக் கொள்கையில் காவிமயத்தைப் புகுத்தும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் சிக்கல் மற்றும் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிக்கல் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் துணைச் செயலாளர் ப.சுபாஷ்சந்திரபோஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ஏ.ஜி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் நா.சத்தியசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் எல்.பி.சாமி, மாவட்டத் துணைத் தலைவர் மோகன் இங்கர்சால், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஹரிகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் து.இளவரசன் மற்றும் கே.டி.முருகையன், சிவநேசன், வெற்றிவேல், ஏ.சிவகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். மயிலாடுதுறை மயிலாடுதுறை சின்னகடைத் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் ப.பாலசுந்தரம் தலைமை வகித்தார். ஆக்கூர் கிளைத் தலைவர் சொ.இராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் செம்பை குணா மற்றும் மா.வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் நா.ராஜாராமன், கல்லூரி பேராசிரியர்கள் உரையாற்றினர். மாவட்டத் துணைச் செயலாளர் இரா.தேன்மொழி நன்றி கூறினார்.