சீர்காழி, ஜன.13- கொள்ளிடம் பகுதியில் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படு வதை தடுக்க வலியுறுத்தப் பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் ஒன்றியத் தில் 42 ஊராட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராமங் கள் உள்ளன. கொள்ளிடம் ஒரு கடைமடை பகுதி ஆகும். விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இங்கு நடை பெற்று வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஒன்றிய பகுதியில் சுமார் 20 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் குறுவை மற்றும் சம்பா நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சில இடங்களில் முப்போக சாகுபடியும் செய் யப்பட்டு வந்தது. மேலும் கொள்ளிடம் பகுதியில் கோடை காலங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் குள்ள கார் என்ற நெற் பயிர் சாகுபடி யும் நடைபெற்று வந்தது. ஆனால் காலப்போக்கில் நெற்பயிர் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வந்து கொண்டி ருக்கிறது. விளைநிலங்கள் மனை பட்டாக்களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு காரணமாகும். நன்கு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்த விளைநிலங்கள் வீட்டு மனை களாக மாற்றப்பட்டு உள்ள தால் நெற்பயிர் சாகுபடி செய்துவரும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே வரு கிறது. கொள்ளிடம் ஒன்றியத் தில் மட்டும் கடந்த 20 ஆண்டு களில் சுமார் 4000 ஏக்கர் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு நகர்களாக மாறியுள்ளது. இங்கு உள்ள வடிகால் வாய்க்கால்களும் மூடப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீர் வெளியேற முடியா மல் அப்படியே மாதக்கணக் கில் தேங்கி நிற்கிறது. மேலும் நல்ல செழிப்பான விளைநிலங்கள் வீட்டு மனை களாக மாற்றப்பட்டுள்ளன. அவைகளிலிருந்து விளை விக்கப்படும் நெல் உளுந்து பயறு உள்ளிட்ட தானியங்க ளின் உற்பத்தி பல மடங்கு குறைந்துள்ளது. எனவே விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப் படுவதை உடனடியாக தடை செய்யவும், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள தரிசு நில மேம்பாட்டு தித் டத்தின்படி அனைத்து தரிசு நிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமி ழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.