tamilnadu

img

காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

திருச்சி:
கர்நாடகா மாநிலத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த கொள்ளளவான  124.80 அடியை எட்டிவிட்டது. மேலும், அணைக்கு 45,632 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 42,931 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். அந்த அணையின் நீர்மட்டம் 83.61 அடியாக இருந்தது. அணைக்கு 23,218 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு மொத்தம் 67,931 கன அடியாக உள்ளதால்  திருச்சி முக்கொம்பு அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
 

;