tamilnadu

img

பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

திருச்சிராப்பள்ளி, ஏப்.8-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் திங்கள்கிழமை அன்று பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி ஆலந்தூர் மேற்கு, வேப்பந்தட்டைகிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயகோபாலபுரம், மருதடி, தேனூர், எலந்தலப்பட்டி, குருர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்பாரிவேந்தர் பேசியதாவது:- வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் விவசாயப் பொருட்கள் தொடர்பான தொழிற் சாலை கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கனவுதிட்டமான ரயில் பாதை திட்டம் செயல்படுத்தநடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் செயல்படும் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்காக அரசு மருத்துவமனை கல்லூரி மற்றும்கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் கொண்டு வருவேன் என்றார். இந்தபிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லத்துரை, ரமேஷ், கலையரசி, அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டனர்.  

;